tag:blogger.com,1999:blog-122107052024-02-28T07:08:48.742-08:00பழமொழிகள்சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-12210705.post-1113627935783280202005-04-15T22:05:00.000-07:002008-10-06T02:21:59.484-07:00பழமொழிகள் (ச)சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி<br />சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.<br />சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?<br />சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.<br />சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா<br />சர்க்கரை என்றால் தித்திக்குமா?சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-12210705.post-1113627897924845802005-04-15T22:04:00.000-07:002008-10-06T02:22:34.606-07:00பழமொழிகள் (கோ)கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.<br />கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.<br />கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.<br />கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.<br />கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.<br />கோபம் சண்டாளம்.<br />கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?<br />கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?<br />கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?<br /><br />'' கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் ''<br />[* கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்*]<br /><br />'' கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும் ''<br />[* மற்றவர்கள் கோடி கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தாரோடு கூடிப் <br />பழகுவதே கோடிப் பெருமை*] இது ஒளவையாரின் பொன்மொழிசிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627825916521442005-04-15T22:03:00.001-07:002008-10-06T02:22:59.245-07:00பழமொழிகள் (கை)கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.<br />கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா<br />கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?<br />கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்<br />கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்<br />கையிலே காசு வாயிலே தோசை<br />கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.<br />கையூன்றிக் கரணம் போடவேண்டும்.<br />கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627860103182762005-04-15T22:03:00.000-07:002008-10-06T02:23:16.069-07:00பழமொழிகள் (கொ)கொடிக்கு காய் கனமா?<br />கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.<br />கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.<br />கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.<br />கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?<br />கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.<br />கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.<br />கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?<br />கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?<br />கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.<br />கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627779854472432005-04-15T22:01:00.000-07:002008-10-06T02:23:35.762-07:00பழமொழிகள் (கே)கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.<br />கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?<br />கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.<br />கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627683406932702005-04-15T22:00:00.000-07:002008-10-06T03:38:15.266-07:00பழமொழிகள் (கெ)கெடுக்கினும் கல்வி கேடுபடாது<br />கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது<br />கெடுவான் கேடு நினைப்பான்<br />கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.<br />கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.<br />கெட்டும் பட்டணம் சேர்<br />கெண்டையைப் போட்டு வராலை இழு.<br />கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.<br />கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12210705.post-1113627612324246972005-04-15T21:59:00.001-07:002008-10-06T03:38:45.572-07:00பழமொழிகள் (கூ)கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.<br />கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?<br />கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.<br />கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627571263835382005-04-15T21:59:00.000-07:002008-10-06T03:39:04.251-07:00பழமொழிகள் (கு)குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?<br />குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.<br />குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.<br />குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.<br />குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?<br /><br />குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.<br />குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.<br />குணத்தை மாற்றக் குருவில்லை.<br />குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.<br />குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.<br /><br />குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.<br />குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.<br />குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.<br />குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.<br />குப்பை உயரும் கோபுரம் தாழும்.<br /><br />குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?<br />குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.<br />குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?<br />குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே<br />குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.<br /><br />குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.<br />குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.<br />குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்<br />குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை<br />குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.<br /><br />குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?<br />கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.<br />குரங்கின் கைப் பூமாலை.<br />குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.<br />குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627542205610882005-04-15T21:58:00.000-07:002008-10-06T03:39:43.730-07:00பழமொழிகள் (கி & கீ)கிட்டாதாயின் வெட்டென மற<br />கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.<br />கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?<br /><br />கீர்த்தியால் பசி தீருமா?<br />கீறி ஆற்றினால் புண் ஆறும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627491504595662005-04-15T21:57:00.001-07:002008-10-06T03:40:05.485-07:00பழமொழிகள் (கா)காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.<br />காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.<br />காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.<br />காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.<br />காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?<br /><br />காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?<br />காணி ஆசை கோடி கேடு.<br />காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்<br />காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.<br />காப்பு சொல்லும் கை மெலிவை.<br /><br />காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.<br />காய்த்த மரம் கல் அடிபடும்.<br />காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.<br />காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.<br />காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?<br /><br />கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை<br />காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.<br />காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்<br />காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.<br /><br />காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. <br />காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்<br />காற்றில்லாமல் தூசி பறக்குமா?<br />காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.<br />காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627451679247892005-04-15T21:57:00.000-07:002008-10-06T03:40:22.776-07:00பழமொழிகள் (க)கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?<br />கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.<br />கடலுக்குக் கரை போடுவார் உண்டா?<br />கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.<br />கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?<br />கடல் திடலாகும், திடல் கடலாகும்.<br /><br />கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?<br />கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.<br />கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.<br />கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.<br /><br />கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.<br />கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.<br />கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.<br />கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?<br />கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.<br /><br />கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.<br />கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.<br />கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.<br />கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.<br />கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.<br /><br />கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.<br />கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.<br />கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.<br />கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.<br />கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.<br /><br />கண் கண்டது கை செய்யும்.<br />கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?<br />கண்டதே காட்சி கொண்டதே கோலம்.<br />கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.<br />கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.<br /><br />கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?<br />கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?<br />கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.<br />கதிரவன் சிலரை காயேன் என்குமோ?<br />கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.<br /><br />கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி<br />கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.<br />கரணம் தப்பினால் மரணம்.<br />கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?<br />கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.<br /><br />கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்<br />கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.<br />கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?<br />கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்<br />கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.<br /><br />கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.<br />கல்லாதவரே கண்ணில்லாதவர்.<br />கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.<br />கல்வி அழகே அழகு.<br />கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.<br /><br />கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.<br />கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.<br />களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.<br />கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.<br />கள்ள மனம் துள்ளும்.<br /><br />கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.<br />கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!<br />கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!<br />கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.<br />கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.<br /><br />கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.<br />கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.<br />கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?<br />கனிந்த பழம் தானே விழும்.<br />கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.<br />கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627411733768282005-04-15T21:56:00.001-07:002008-10-06T03:40:38.929-07:00பழமொழிகள் (ஓ)ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.<br />ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.<br />ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.<br />ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.<br />ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.<br />ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.<br />ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.<br />ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.<br /><br /> ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.<br /> ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627383532297522005-04-15T21:56:00.000-07:002008-10-06T03:40:57.223-07:00பழமொழிகள் (ஒ)ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.<br />ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?<br />ஒரு காசு பேணின் இரு காசு தேறும்<br />ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை<br />ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?<br />ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?<br />ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை<br />ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?<br /><br />ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.<br />ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்<br />ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.<br />ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.<br />ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.<br />ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.<br />ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.<br />ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627352294715762005-04-15T21:55:00.000-07:002008-10-06T03:41:13.842-07:00பழமொழிகள் (ஐ)ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.<br />ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது<br />ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627319423772172005-04-15T21:54:00.001-07:002008-10-06T03:41:32.298-07:00பழமொழிகள் (ஏ)ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை<br /> ஏரி நிறைந்தால் கரை கசியும்.<br /> எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.<br /> ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.<br /> ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை<br /> ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.<br /> ஏழை என்றால் எவர்க்கும் எளிது<br /> ஏழைபேச்சு அம்பலம் ஏறாது<br /> ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்<br />கோபம்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627285750681412005-04-15T21:54:00.000-07:002008-10-06T03:41:48.548-07:00பழமொழிகள் (எ)எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் <br />என்ன தருவாய் ?<br /><br />எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.<br />[நெருப்பில்லாது புகையாது]<br /><br />எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?<br />எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.<br />எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?<br /><br />எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,<br />எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.<br />எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.<br />எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.<br />எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.<br />எண்ணை முந்துதோ திரி முந்துதோ?<br /><br />எதார்த்தவாதி வெகுசன விரோதி.<br />எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.<br />எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.<br />எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?<br />எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.<br /><br /> எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா<br /> எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?<br />எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.<br />எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே. <br /><br /> எருது நோய் காக்கைக்கு தெரியுமா?<br /> எலி அழுதால் பூனை விடுமா?<br /> எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.<br /> எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்<br /> எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.<br /><br /> எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?<br /> எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது<br /> எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?<br /> எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?<br /> எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்<br /><br /> எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.<br /> எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.<br /> எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.<br /> எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்<br /> எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.<br /> எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.<br /> எறும்பு ஊர கல்லுந் தேயும்.<br /> எறும்புந் தன் கையால் எண் சாண்சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627243124379432005-04-15T21:53:00.001-07:002008-10-06T03:42:03.918-07:00பழமொழிகள் (ஊ)ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.<br />ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.<br />ஊண் அற்றபோது உடலற்றது.<br />ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு<br />ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.<br />ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.<br />ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627211734815592005-04-15T21:53:00.000-07:002008-10-06T03:42:22.590-07:00பழமொழிகள் (உ)உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.<br /> உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.<br /> உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா<br /> உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.<br /> உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?<br />உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.<br /><br /> உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.<br /> உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.<br /> உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.<br /><br />'' உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார்<br />தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ''<br />[ வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]<br />இது பழமொழியன்று.... பொன் மொழி. ஒளவையார் பாடியது.<br /><br /> உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.<br />உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?<br />உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.<br />உலோபிக்கு இரட்டை செலவு.<br />உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.<br />உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.<br /><br />உளவு இல்லாமல் களவு இல்லை.<br />உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல<br />உள்ளது போகாது இல்லது வாராது.<br />உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய<br />உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்<br />உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.<br />[இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627178259196962005-04-15T21:52:00.000-07:002008-10-06T03:43:00.163-07:00பழமொழிகள் (ஈ)ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.<br />ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.<br />ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.<br />ஈர நாவிற்கு எலும்பில்லை.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627139173596282005-04-15T21:51:00.000-07:002008-10-06T03:43:22.560-07:00பழமொழிகள் (இ)இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.<br />இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.<br />இஞ்சி இலாபம் மஞ்சளில்.<br />இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.<br />இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.<br /><br />இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.<br />இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.<br />இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.<br />இரக்கப் போனாலும் சிறக்கப் போ.<br />இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.<br /><br />இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.<br />இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை <br />இராச திசையில் கெட்டவணுமில்லை <br />இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.<br />இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.<br /><br />இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.<br />இருவர் நட்பு ஒருவர் பொறை.<br />இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.<br />இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?<br />இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.<br /><br />இளங்கன்று பயமறியாது<br />இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.<br />இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.<br />இறங்கு பொழுதில் மருந்து குடி<br />இறுகினால் களி , இளகினால் கூழ்.<br /><br />இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.<br />இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.<br />இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே<br />இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113627081641867852005-04-15T21:50:00.000-07:002008-10-06T03:43:42.726-07:00பழமொழிகள் (ஆ)ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.<br />ஆரால் கேடு, வாயால் கேடு.<br />ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.<br />ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.<br />ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.<br /><br />ஆழமறியாமல் காலை இடாதே.<br />ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.<br />ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.<br />ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.<br />ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.<br /><br />ஆறின கஞ்சி பழங் கஞ்சி.<br />ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?<br />ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.<br />ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.<br />ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.<br /><br />ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.<br />ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.<br />ஆனைக்கும் அடிசறுக்கும்.<br />ஆனை படுத்தால் ஆள் மட்டம்.<br />ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னேசிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12210705.post-1113626964874757992005-04-15T21:47:00.000-07:002008-10-06T03:44:11.971-07:00பழமொழிகள்அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.<br />அகல உழுகிறதை விட ஆழ உழு.<br />அகல் வட்டம் பகல் மழை.<br />அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.<br />அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.<br />அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது<br />அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?<br />அடக்கமே பெண்ணுக்கு அழகு<br /><br />அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.<br />அடாது செய்தவன் படாது படுவான்.<br />அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.<br />அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு<br />இரைச்சல் இலாபம்.<br />அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.<br />அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது <br /><br />அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.<br />அந்தி மழை அழுதாலும் விடாது.<br />அப்பன் அருமை மாண்டால் தெரியும்.<br />அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.<br />அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.<br />அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.<br />அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.<br />அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.<br /><br /><br />அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?<br />அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.<br />அழுத பிள்ளை பால் குடிக்கும்.<br />அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.<br />அளக்கிற நாழி அகவிலை அறியுமா?<br /><br /><br />அறச் செட்டு முழு நட்டம் .<br />அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.<br />அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.<br />அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.<br />அறமுறுக்கினால் அற்றும் போகும்.<br /><br /><br />அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.<br />அறிய அறியக் கெடுவார் உண்டா?<br />அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.<br />அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.<br />அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.<br /><br /><br />அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.<br />அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.<br />அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி<br />தான் தியாகம் வாங்கவேண்டும்.<br />அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.<br />அற்ப அறிவு அல்லற் கிடம்.<br /><br /><br />அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.<br />அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?<br />அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.<br />அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.<br />அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com0